நாங்கள் பாவம்

திடீரென !

”போய்  வருகிறேன் ” என்கிறார் பேராசிரியர் .

திகைத்துப் போகிறோம் நாங்கள் ,

”மறுபடி வருவீர்களா ?

களத்தின் காவலராய் இருந்தீர்கள் ,

கனமான ஆலோசனை தந்தீர்கள் ,

கருத்திலே கவனமாய் நின்றீர்கள் ,

மறுபடி வருவீர்கள் தானே !”

மலை போன்ற எதிர்பார்ப்பில் நாங்கள் !

 

”மறுபடியுமா ?நானெப்படி மறுபடியும் வரமுடியும்?”

சிரிக்கிறார் அவர் !அதே சிரிப்பு !

தமிழ் கற்பிக்கும் போது வருகிற அதே

தனித்துவமான சிரிப்பு !

தமிழ் விழாக்களுக்குத் தலைமை தாங்க ?”

இறுதி வேண்டுதலாய் ,

ஈனஸ்வரத்தில் எமது

குரல் !

”நான் நானாக வரவேண்டும் என்பதில்லையே !

எனக்குப் பதிலாக இன்னொரு பூ

நான் உதிர்ந்த இடத்தில் இன்னொரு மலர் ,

எனது நினைவுகள் ஜனித்துக் கொண்டே இருக்கட்டும்

நினைவுகள் நிரந்தரமானவை –!”

மீண்டும் அதே சிரிப்பு !

தாங்க முடியவில்லை !

குமுறலைத் தாங்க முடியாமல்

கொட்டத் தொடங்குகிறோம் !

வேண்டாம் ,வாருங்கள் ,போக வேண்டாம் !”

”இறைவனைப் பார்த்துப் பேசி விட்டு வருகிறேன் ”

போகிறார் அவர் .

இறைவன் அவரை ஆசீர்வதிப்பார் ,

அதிலென்ன சந்தேகம் ?

நாங்கள் தான் பாவம் .

 

(  28.01.1989.கலை இலக்கியக் களக் காப்பாளர் பேராசிரியர் .சு .வித்தியானந்தன் அவர்கள் மறைந்தபோது )

நீங்கள் இவற்றையும் விரும்பக்கூடும்

ஆசிரியர்: webadmin

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய