இலையுதிர் காலம்

இலையுதிர் காலம்

ஆசிரியை தனது முதலாம் வகுப்புக் குழந்தைகளை வயல்வெளிக்கு அழைத்துச் சென்றார் .அது இலையுதிர்கால ஆரம்பம் .அமைதியான காலைப்பொழுது .உயர வானத்தில் பறவைக் கூட்டம் பறந்து கொண்டிருந்தது .பறவைகள் மெதுவாகக் கத்தின .இதனால் புல்வெளியில் ஒருவித சோகம் நிலவியது .
ஆசிரியை குழந்தைகளிடம் கேட்டார்:

”இன்று நாம் இலையுதிர் கால வானத்தைப் பற்றியும் குடிபெயரும் பறவைகளைப் பற்றியும் படிக்கப் போகிறோம் .இப்போது வானம் எப்படி உள்ளது ?அழகான தமிழில் சொல்லுங்கள் பார்ப்போம் .–”
குழந்தைகள் அமைதியாக இருந்தனர் .வானத்தைப் பார்த்துச் சிந்தித்தனர் .ஓரிரு நிமிடங்களில் இவ்வாறு கூறினர் .

”வானம் நீல நிறமானது –”
”வானம் வெளிர் நீல நிறமானது –”’
”வானம் இளநீல நிறமானது –”
”வானத்தில் முகில் உண்டு ”

அவ்வளவுதான் !குழந்தைகள் நீலம் ,வெளிர்நீலம் ,இளநீலம் ,முகில் போன்ற சொற்களையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தனர் .

நீண்ட கண்களை உடைய அகல்யா ஒருபுறம் அமைதியாக நின்றாள் .

”அகல்யா! நீ என்ன நினைக்கிறாய் ?”
”வானம் மென்மையானது ” மெதுவாகச் சொல்லி ச் சோகப் புன்னகை பூத்தாள் அகல்யா .குழந்தைகள் அமைதியாயினர் .அத்தருணத்தில் அவர்கள் இதுவரை பார்க்காத ஒரு வானத்தைப் பார்த்தனர் .
”வானம் சோகமானது ”
”வானம் கவலையூட்டுவது ”
”வானம் துக்கம் தருவது ”
”வானம் மிக மிகக் குளிரானது ”

வானம் இப்போது உயிருள்ள பொருள் போல் விளையாடியது .ஒலி எழுப்பியது .சுவாசித்தது .குழந்தைகள் அதன் சோகமான நீலநிற இலையுதிர் காலக் கண்களை ப் பார்த்துக்கொண்டிருந்தனர் .

( 1990)

நீங்கள் இவற்றையும் விரும்பக்கூடும்

ஆசிரியர்: webadmin

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய