அவை காட்டும் வழி

சிற்றெ றும்பு சேர்ந்து சேர்ந்து
உணவைக் காவிச் செல்லுது
தேசம் வாழ நாமும் கூடிச்
சேர்ந்து சேவை செய்குவோம்

தேனீக் கூட்டம் தமது வேலை
தம்மைப் பங்கு போட்டுமே
திறமை யாகச் செய்வ தைநாம்
தினமும் பார்கக வில்லையா?

காகம் தனக்குக் கிடைக்கும் உணவைத்
தனித்தே யுண்ப தில்லையே
காகா என்று கரைந்து கரைந்து
களி கொண் டுணவை யுண்ணுமே

தனக்கு உணவு தந்த வர்க்காய்த்
தனது உயிரைத் தானுமே
கொடுக்கும் நன்றிக் குணம தனைக்
கொண்ட நாயைக் கண்டோமே

ஈழநாடு 10.09.1989

நீங்கள் இவற்றையும் விரும்பக்கூடும்

ஆசிரியர்: webadmin

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய