நல்வரவு

இணைய வாசகர்களுக்கு என் முத்தமிழ் வணக்கங்கள். இணைய வெளியில் எனது இருப்பாக அமையும் Kohilamahendran.lk இணையத் தளத்திற்கு உங்களை வரவேற்பதில் பெரு மகிழ்வடைகிறேன். இத் தளத்தின் முக்கியமான நோக்கம் கடந்த நாலு தசாப்தங்களாக அச்சில் வெளிவந்திருக்கும் எனது நூல்களை மின்னுருவில் இலவசமாக வாசகர்களுக்குக் கிடைக்கச் செய்வதாகும். பல்வேறு காரணங்களால் நான் எழுதிய எல்லா நூல்களையும் இங்கே வெளியிட முடியாது போனாலும் சுமார் 27 நூல்கள் மின்வடிவில் இங்கே இணைக்கப்பட்டுள்ளன. இவற்றை மேலுள்ள “நூல்கள்” என்ற இணைப்பை அழுத்துவதன் மூலம் நீங்கள் பார்வையிட முடியும்.

மேலும், நான் எழுதி இன்னும் நூலுருப்பெறாத ஆக்கங்கள் சிலவும் “புனைவுகள்”, “புனைவு சாராதவை”, “சிறுவர் இலக்கியங்கள்” என்ற இணைப்புகளில் இங்கே தரப்பட்டுள்ளன. எனது ஆறு தசாப்த காலக் கலை, இலக்கிய உலக வாழ்வின் நினைவுகளைப் பொதிந்திருக்கும் புகைப்படங்கள் ” படங்கள்” என்ற இணைப்பின் கீழ் உள்ளன.

மாறிவரும் உலகத்தில் அச்சுப்பதிப்பிக்கப்பட்ட நூல்களை வாசிக்கும் வாசகர் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவதோடு தமிழர்கள் இன்று உலகெங்கும் பரந்து வாழ்வதால் இணையவழித் தொடர்பாடல் தவிர்க்க முடியாத நிதர்சனம் ஆகிவிட்டது. இந்த யதார்த்தங்களை உள்வாங்குகின்ற எழுத்தாளர்கள் இணையத்தில் தமது படைப்புகளுக்கு ஓர் இருப்பை உருவாக்குவது தவிர்க்க முடியாதது. தீ எரிக்கமுடியாத, கறையான் அரிக்கமுடியாத, நீர் கரைக்க முடியாத ஒரு ஊடகம் இணையம் என்பதால், நம் படைப்புகள் என்றென்றும் இணையவெளியில் நிலைத்து நிற்கும் என்ற நம்பிக்கையையும் இது தருகிறது.

வாசியுங்கள். பயன் பெறுங்கள். உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.

ஆழ்க தீயதெல்லாம்! வையகம் துயர் தீர்க!!

கோகிலா மகேந்திரன்
21. 08. 2018

நீங்கள் இவற்றையும் விரும்பக்கூடும்

ஆசிரியர்: webadmin

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய